• India
```

14 இலட்சம் கோடிகளை இழந்த முதலீட்டாளர்கள்...என்ன தான் ஆச்சு நம்ம பங்குச் சந்தைக்கு...?

Share Market Update Today

By Ramesh

Published on:  2025-01-13 16:43:44  |    198

Share Market Update Today - மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்கு சந்தை என இரண்டுமே இன்று இறக்கத்தில் முடிவடைந்து இருக்கிறது.

Share Market Update Today - இன்றைய மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குசந்தைகளின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டியின் முடிவு நிலைகள் குறித்து பார்க்கலாம்

மும்பை பங்குச்சந்தை - சென்செக்ஸ்

மும்பை பங்கு சந்தையின் குறியீடான சென்செக்ஸ், இன்று காலை 76,629.90 புள்ளிகளில் துவங்கி மாலையில் 76,330.01 புள்ளிகளில் முடிவடைந்து இருக்கிறது, நேற்றைய தினத்தின் முடிவை (77,378.91) காட்டிலும் இன்று 1,048.90 புள்ளிகள் சரிந்து இருக்கிறது, இன்றைய சென்செக்ஸ் அதிகபட்சமாக 77,128.90 புள்ளிகள் வரை சென்றது, குறைந்தபட்சமாக 76,249.72 புள்ளிகள் வரை சென்றது.

மும்பை பங்கு சந்தையில் இன்றைய நிலவரப்படி கிட்டதட்ட 882 நிறுவனங்கள் ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன, 3,333 நிறுவனங்கள் சரிவை சந்தித்து இருக்கின்றன, 109 நிறுவனங்களின் பங்கில் எந்த மாற்றமும் இல்லை 



தேசிய பங்குச்சந்தை - நிஃப்டி

தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி இன்று காலையில் 23,195.40 புள்ளிகளில் ஆரம்பித்து மாலையில் 23,085.95 புள்ளிகளில் முடிவடைந்து இருக்கிறது. நேற்றைய தினத்தின் முடிவை (23,431.50) காட்டிலும் இன்று 345.15 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இன்றைய நிஃப்டி அதிகபட்சமாக 23,340.95 புள்ளியைத் தொட்டது, குறைந்தபட்சமாக 23,047.25 என்ற புள்ளி வரை சென்றது.

தேசிய பங்குச் சந்தையில் இன்றைய நிலவரப்படி கிட்டதட்ட 459 நிறுவனங்கள் ஏற்றத்தை சந்தித்து இருக்கின்றன, 2,328 நிறுவனங்கள் சரிவை சந்தித்து இருக்கின்றன, 41 நிறுவனங்களின் பங்குகளில் எந்த வித மாற்றமும் இல்லை.

" இன்று மட்டும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் 14 இலட்சம் கோடிகளை இழந்து இருக்கிறார்களாம், பண வீக்கம், ரூபாயின் மதிப்பு சரிவு, ஆயில் விலையேற்றம் உள்ளிட்ட காரணிகளே இந்த பங்குச்சந்தையின் வீழ்ச்சிக்கு காரணமாக கூறப்படுகிறது "